search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்கள் மறியல்"

    • பணி நிரந்தர செய்ய வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    காட்பாடி காந்தி நகரில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு சி ஐ டி யு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தர செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் இன்று நடந்தது.

    போராட்டத்திற்கு மாநில செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் ஜெகன் பொருளாளர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி ஐ டி யு மாவட்ட செயலாளர் பரசுராமன் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் தாமோதரன், மாவட்ட தலைவர் தர்மன் ஆகியோர் பேசினர்.

    புயல் பாதிப்புகளின் போது இரவு பகலாக பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அரசு அறிவித்தபடி தினக்கூலி ரூ.380 அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

    பல ஆண்டுகாலம் பணி செய்த ஒப்பந்த தொழிலாளர்களை காலியாக உள்ள பணியிடங்களில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

    ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லை என்ற பொய்யான அறிக்கை அனுப்புவது கைவிட வேண்டும் ஊதிய உயர்வு வேலைப்பளு பேச்சுவார்த்தைகளில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேசி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் நடந்தது.

    ×